எஸ்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் கைதி. இப்படத்தின் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்திற்கு பின்னரே மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது.
கைதி படம் இறுதி காட்சியில் அடுத்த பாகம் வெளியாகும் என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், கைதி 2ம் பாகம் வெளியாகும். ஆனால், எப்போது என தெரியவில்லை என லோகேஷ் கனகராஜும் கூறியிருந்தார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அப்படத்தின் தயாரிப்பாலர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.
இந்த பாகத்தில் சிறைக்கு செல்லும் முன் கார்த்தி என்ன செய்து கொண்டிருந்தார், வில்லனுக்கும் அவருக்கும் ஏதேனும் முன் விரோதம் இருந்ததா என்பது பற்றி விவரிக்கப்படும் எனத்தெரிகிறது.
Siragadikka aasai:…
டைரக்டர் ஆனந்த்…
சுந்தர் சி…
Rajini: ரஜினியின்…
உத்தமவில்லன் படத்திற்கான…