More

இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு… எஸ்பிபியின் நினைவில் வாடும் சச்சின்!

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.அவருக்காக அனைவருமே பிராத்தித்தனர்.ஆனால் பிராத்த்னைக்கு பலன் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் அவர் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.

எஸ்.பிபி.யின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று நடைபெற்றது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் இன்னும் மீள துயரத்தில் அவரது இசைகளை கேட்டு மனதிற்கு மருந்தாக ஆறப்போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஜியின் இசையைக் கேட்பது எப்போதும் பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் படத்தில் இருந்து அவர் எழுதிய ‘சச் மேரே யார் ஹை’ என்ற பாடல் நான் எனது பிளேலிஸ்ட்டில் எப்போதும் வைத்திருப்பேன். அது எனக்கு பிடித்த ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.
அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் எனது பிரார்த்தனை. என்று பதிவிட்டுள்ளார் .

 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts