Categories: latest news

ஒரு முறை திருமணத்திற்கு ரெடியான சாய்பல்லவி.. ஆனா? நடக்காமல் போனதுக்கு இதுதான் காரணமா?

நம்பர் ஒன் நடிகை: தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்போது நம்பர் ஒன் நடிகையாகவும் அனைவருக்கும் பிடித்தமான நடிகையுமாக மாறியிருப்பவர் நடிகை சாய்பல்லவி. தெலுங்கில்தான் இவருக்கு மார்கெட் அதிகம். ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறிவிட்டார் சாய்பல்லவி. அளவான சிரிப்பு, பெண்களுக்கே உரிய நளினம், பந்தா இல்லாத பேச்சு என கிட்டத்தட்ட தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என ஒரு ஆண் நினைக்கிறானோ அத்தனை அம்சங்களும் பொருந்திய பெண்ணாக இருப்பவர் சாய்பல்லவி.

அனைவருக்கும் பிடித்தமானவர்: பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம். இதுவே பலரது ஈர்ப்புக்கு காரணம். இவருக்கு சுத்தமாக பிடிக்காதது மேக்கப். சூட்டிங்கிலும் மேக்கப் போடவே மாட்டாராம். பிரேமம் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சாய்பல்லவி. மலர் டீச்சராக தெலுங்கில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியராக நடித்து முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். எப்போதுமே தலைமுடியை விரித்துதான் போடுவார்.

முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்: அதுவே அவருக்கு பிளஸாக அமைந்தது பிரேமம் படத்தில். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராகவே மாறிவிட்டார். தமிழில் சொல்லும்படியான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய கதாபாத்திரம் வெறுமனே ஹீரோக்களுக்கு ஜோடியாக இருக்கக் கூடாது. தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சாய்பல்லவி.

அமரன்: அப்படித்தான் தமிழில் அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். படத்திற்கு என்ன மாதிரியான ஆக்டிங் வேண்டுமோ அது சாய்பல்லவியிடமிருந்து சரியாக கிடைத்துவிடும். அமரன் திரைப்படத்தில் அப்படியொரு ஆக்டிங்கைத்தான் வழங்கினார். இந்த நிலையில் தேசிய விருது பெறுவது குறித்து சாய்பல்லவி கூறிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தேசிய விருது: அதாவது தேசிய விருது பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு முறை என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போக என்னிடம் அவருடைய ஒரு பட்டுப்புடவையை கொடுத்து உன் திருமணத்திற்கு கட்டிக் கொள் என்று கொடுத்தார். அதிலிருந்தே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில்தான் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் என்றாவது ஒரு பெரிய விழாவிற்கு இந்த புடவையை கட்டிக் கொண்டு போக வேண்டும் என நினைத்தேன்.

அதனால் நான் எப்போது தேசிய விருதை வாங்குறேனோ அப்போதுதான் இந்த புடவையை கட்ட வேண்டும் என நினைத்திருக்கிறேன் என சாய்பல்லவி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago