தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா , ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.
மேலும், இந்த லாக்டவுனில் யோகா மற்றும் ஒர்க் அவுட் உள்ளிட்டவரை தனது கணவரின் அறிவுரைப்படி செய்து வருவதாக சமந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜக்கி வாசுதேவ் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு “சீடர் தயாராக இருக்கும்போது குரு தோன்றுவார்” என கேப்ஷன் கொடுத்து ஒரு நீண்ட பதிவினை இட்டுள்ளார்.
ஒரு படம்…
நடிகர் சிம்புவை…
விடாமுயற்சி திரைப்படம்…
ஷங்கர் இயக்கத்தில்…
அன்னக்கிளி படம்…