தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா சாம்ஜாம் என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக கோட் ஷூட் அணிந்துக்கொண்டு பிரபலங்களுடன் கலந்துரையாடும் சமந்தா தற்ப்போது செம கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட “ப்பாஹ் என்னமா இது…? ” என பாடகி சின்மயி கமெண்ட் அடித்துள்ளார்.
இதுவரை மூன்று…
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…
தெலுங்கு படங்களில்…