தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.
பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
அந்தவகையில் தற்போது தனது மாமியார் மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக ஹலோவின் பண்டிகை கொண்டாடியுள்ளார். வித்யாசமான கெட்டப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது. NUN கெட்டப் சமீராவிற்கு கட்சிதமாக பெருந்தியுள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர்.
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மெய்னி தில் துஜ்கோ தியா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம் ‘ படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா என்பது குறிப்பிடத்தக்கது.
Siragadikka aasai:…
மாற்றம் எனும்…
நடிகர் அஜித்குமாரின்…
Actor NTR:…
கமல்ஹாசனின் மகள்…