Categories: latest news

விசாரணை படத்தின் போது மிஷ்கின் செய்த காரியம்.. சமுத்திரக்கனி சொன்ன சீக்ரெட்

முகம் சுழிக்க வைக்கும் பேச்சு:சமீபகாலமாக மிஷ்கின் பற்றிய செய்தி நாள்தோறும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கின்றது. எந்தவொரு பட விழாவானாலும் அங்கு மிஷ்கின் இருக்கிறார் என்றால் ஒரே களேபரம்தான். இன்று என்ன பேசப்போகிறார் மிஷ்கின்? எப்படி பேசப்போகிறார்? என்ற ஆர்வத்தை உருவாக்கி விடுகிறார். அதற்கு ஒரே காரணம் அவருடைய கெட்டவார்த்தை. பொதுமேடையில் நாகரீகம் அறிந்த பேச வேண்டும் என்று சொல்வார்கள்.

சமுத்திரக்கனி சொன்ன காரணம்:ஆனால் இப்படி பேசியாவது இந்தப் படம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துவிடாதா என்ற காரணத்தினால்தான் மிஷ்கின் இப்படி பேசுகிறார் என சமுத்திரக்கனி கூறினார். ஏன் கொட்டுக்காளி பட விழாவிலும் நிர்வாணமாக நிற்பேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை பற்றி சமுத்திரக்கனி மிஷ்கினிடம் கேட்டபோது அதற்கும் இந்த மாதிரியான பதிலைத்தான் கொடுத்தாராம் மிஷ்கின்.

இப்படி ஒரு நல்ல எண்ணமா?:அதாவது இப்படியாவது இந்தப் படத்தை பார்க்க வரமாட்டானா? அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை பார்க்க திரையரங்கிற்கு வருவான் என்ற காரணத்தினால்தான் இப்படி பேசினேன் என மிஷ்கின் கூறினாராம். மொத்தத்தில் தன் படம் மட்டுமில்லாமல் நல்ல தரம் வாய்ந்த படங்கள் ஜெயிக்க வேண்டும் என விரும்புபவர் மிஷ்கின். சினிமா மீதும் படங்களின் மீதும் அதிக பற்று கொண்டவர் மிஷ்கின்.

25 லட்சம் கடன்:உதாரணமாக விசாரணை படத்தை பார்த்து முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் இருக்கிற அனைத்து இயக்குனர்களை அழைத்து பெரிய ஹாலில் உட்கார வைத்து அந்தப் படத்தை போட்டுக்காண்பித்தார் மிஷ்கின். அதற்கு கிட்டத்தட்ட 20 லிருந்து 25 லட்சம் செலவு ஆனது. அப்போது அவரிடம் கையில் காசும் இல்லை. ஆனாலும் கடனாக 25 லட்சம் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை போட்டுக்காண்பித்தார் மிஷ்கின்.

இத்தனைக்கும் விசாரணை படம் மிஷ்கின் படமே இல்லை. வெற்றிமாறனின் படைப்பு. ஆனால் அந்தப் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என போராடியவர் மிஷ்கின். இது மாதிரியான எண்ணம் யாருக்கும் வரும் என என்னால் சொல்ல முடியாது என சமுத்திரக்கனி கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago