More

இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகிக்கு நேர்ந்த சோகம்… அடப்பாவமே!

சந்தானம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் சக்கப்போடு போடு ராஜா. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வைபவி சாண்டில்யா. மராத்தி படத்தில் அறிமுகமான அவர், சந்தானம் படத்துக்குப் பிறகு இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கேப்மாரி, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

தமிழ் மட்டுமல்லாது மராத்தி, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் வைபவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி வீடியோ வெளியிட்டிருக்கும் வைபவி, `போனவாரம் காய்ச்சல் இருந்தது. இதனால், கொரோனா டெஸ்ட் எடுத்தோம். ஆனால், நெகட்டிவ் என வந்தது. ஆனால், ஆரம்பகட்டம் என்பதால் நெகட்டிவ் வந்திருக்கலாம் என டாக்டர்கள் சொன்னார்கள்.

அதையடுத்து உடல்வலி, வறட்டு இருமல் தொடர்ந்ததால் மீண்டும் எடுத்த டெஸ்டில் கொரோனா பாசிட்டிவ் என வந்திருக்கிறது. எனக்கு மட்டுமில்லாமல், எனது தந்தை மற்றும் தாய்க்கும் கொரோனா பாசிட்டிவ் வந்திருக்கிறது. இதனால், குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார். 
 

Published by
adminram

Recent Posts