">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திரையரங்குகளில் வெளியாகிறதா சார்பட்டா, ஜகமே தந்திரம், நெற்றிக்கண்?
குறிப்பாக படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கலையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் வெளியானது. கொரோனா பரவல் காலத்திலும் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த கார்த்தியின் சுல்தான், தனுஷ் நடித்த கர்ணன் படங்களுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தியேட்டரில் கர்ணன் நன்றாக ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி அளித்ததுடன் அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது. அதனையடுத்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும், ரசிகர்களைக் கவரும் வகையில் பெரிய படங்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் ஏதும் இப்போது இல்லை. எனவே, பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, திரையரங்குகள் மூடப்பட்டிருந்த இந்த இடைப்பட்டக் காலத்தில் வெளியான பெரிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸில் வெளியானது. அதைப்போல, சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை, நயன்தாராவின் நெற்றிக்கண் ஆகிய படங்கள் திரையில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகின்றது.