More

எஸ் பி பி குடும்பத்திடம் அதிக பணம் கேட்டதா மருத்துவமனை… இணையத்தில் பரவும் செய்திக்கு சரண் பதில்!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Advertising
Advertising

எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் மறைவு தமிழகம் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சோக அலைகளை வீச செய்துள்ளது. இந்நிலையில் அவரின் நினைவுகளைப் பலரும் பகிர்ந்து கொண்டு வரும் வேளையில் அவரைப் பற்றிய வதந்திகளும் பரவ ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றாக எஸ் பி பி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் அவர் குடும்பத்தினரிடம் அதிக பணம் கேட்டதாக ஒரு வதந்தி வெளியானது. அதில் தமிழக அரசு தலையிட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதை முழுவதுமாக மறுத்துள்ளார் எஸ் பி பியின் மகன் சரண். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும். அதுவரை பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts