More

டைட்டில் மட்டுமில்ல கதையும் மாத்துப்பா!… இது என்னடா செல்வராகவனுக்கு வந்த சோதனை?…

தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2  திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அப்படத்திற்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு 20ம் தேதி துவங்கவுள்ளது.  பல வருடங்களுக்கு பின் இயக்குனர் செல்வராகவனும், அவரின் சகோதரர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். புதுப்பேட்டைக்கு பின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும். 

ஆனால், ‘நானே வருவேன்’ என்கிற தலைப்பில் ஒரு மாஸ் வேல்யூ இல்லை எனக்கூறி, வேறு தலைப்பு வைக்கும்படி செல்வராகவனிடம் தாணு கூறியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே, இப்படத்திற்கு ‘ராயன்’ என்கிற தலைப்பை செல்வராகவன் பரிசீலித்து வருகிறாராம். அதோடு, படத்தின் கதையையும் மாற்றுமாறு தாணு கூற தற்போது வேறு கதையை செல்வராகவன் தயார் செய்துவிட்டாராம்.அந்த கதை தாணுவுக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 

புதுப்பேட்டைக்கு பின் செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா, அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியில் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் உருவாவது ரசிகர்களுக்கு  விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…
 

Published by
adminram

Recent Posts