More

அப்ரைசல் என்ற பெயரில் செக்ஸுவல் அப்யூஸ் ! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம் !

சென்னையின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்த பெண் ஒருவருக்கு மேல் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

சென்னையின் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்யும் அந்த பெண் அப்ரைசலுக்காக வெளிநாடு அனுப்பப்பட்டுள்ளார். அப்போது அவரின் மேல் அதிகாரி அவரிடம் நேர்காணல் என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதை அடுத்து நிறுவனத்தின் மேல் அதிகாரிகளிடம் அவர் புகார் சொல்ல, எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை நாட, அங்கு நிறுவனத்தை அழைத்து விசாரித்துள்ளனர் நீதிபதிகள். அப்போது நிறுவனம், நாங்களே இது சம்மந்தமாக விசாரணைக்குழு அமைத்துள்ளோம். ஆனால் எந்த ஆதாரங்களும் இல்லை எனப் பதில் வந்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அவரை வேறு ஒரு கிளைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதனால் அந்த பெண் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts