ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை கதற விடுபவர்.
விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கியவர். தற்போத் பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பல மாதங்களாகவே மும்பையில் தங்கி ஷாருக்கானுக்கான கதையை உருவாக்கி வந்தார். பல கரெக்ஷனுக்கு பின்னார் கதை இப்போது ஓகே ஆகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
ஆனால், தற்போது கொரோனா 2வது அலையால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு சினிமா துறையே முடங்கியுள்ளது. எனவே, இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருட துவக்கத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம் என ஷாருக்கான் கூறிவிட்டாராம்.
எனவே, காத்திருக்கிறார் அட்லீ!..
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…