More

நான் ஏமாந்தது போல் யாரும் ஏமாறக்கூடாது – விழாவில் கண்ணீர் சிந்திய ஷகிலா

20 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஷகிலா நடித்த கிளுகிளுப்பு படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. எனவே, முன்னணி நடிகர்கள் கொடுத்த நெருக்கடியால் கேராளவிலிருந்து வெளியேறி சென்னை வந்து செட்டில் ஆகி விட்டார். அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவரின் வாழ்க்கை கதை சினிமாவாக மாறியுள்ளது. இப்படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சந்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ல்ளது. 

இந்நிலையில், இப்படம் தொட்ர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றுஅது. அதில் கலந்து கொண்டு பேசிய ஷகிலா ‘என்னை பற்றி யாராவது தப்பாக பேசினால் நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஏனெனில், என் முன்னால் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை. நான் செய்த தவறை எந்த பெண்ணும் செய்யக்கூடாது என்பதுதான் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கருத்து பெண்களிடம் சென்று சேர்ந்தால் எனக்கு திருப்திதான்’ என அவர் பேசினார். அப்போது அவர் கண் கலங்கினார்.
 

Published by
adminram

Recent Posts