More

இந்தியன் 2-வால் வந்த பஞ்சாயத்து! : ராம்சரண் எடுத்த அதிரடி முடிவு….

இயக்குனர் ஷங்கருக்கும், லைக்காவுக்கும் இடையே இந்தியன் 2 படம் தொடர்பான பஞ்சாயத்து இன்னும் கூட ஒரு சுமூக முடிவை எட்டவில்லை. எனவே, தெலுங்கில், ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தையும், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் பட ரீமேக்கையும் ஷங்கர் எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், லைக்கா நிறுவனம் நீதிமன்றம் மூலம் ஷங்கருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.

Advertising
Advertising

மேலும், அந்நியன் படத்தை தயாரிக்கும் ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனத்திடம் லைக்கா புகார் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, அந்த படம் டேக் ஆப் ஆகுமா என்பது தெரியவில்லை. இதே பிரச்சனை தனது படத்திற்கும் வரலாம் என ராம்சரண் கணக்குப்போடுகிறாராம். எனவே, ஆர்.ஆர்.ஆர். படம் முடிந்து, ஷங்கர் தயாராக இல்லை எனில், வேறு இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடலாம் என அவர் கருதுகிறாராம். 

விரைவில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் விவகாரம் விவாதிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Published by
adminram

Recent Posts