நடன இயக்குனருடன் ரகசிய உறவில் இருந்த சிம்ரன் - உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் சில வருடங்கள் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சிம்ரன். குறிப்பாக இடுப்பை வளைத்து அவர் ஆடும் நடனத்தில் திரையுலகினரும், ரசிகர்களும் சொக்கிப்போயினர். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த அவர் திடீரென மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இந்நிலையில், நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராஜூ சுந்தரத்துடன் அவர் ரகசிய உறவில் இருந்த காரணத்தால், அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது மார்க்கெட்டை இழந்து அவர் திருமணம் செய்து கொண்டதாக நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
உண்மையில், ராஜூ சுந்தரமும், சிம்ரனும் காதலித்தது உண்மை. ஆனால், திருமணம் செய்து கொள்வதில் சில சிக்கல் ஏற்பட்டதால் அந்த ஜோடி பிரிந்தது. மேலும், மார்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே சிம்ரன் திருமணம் செய்து கொண்டதுதான் உண்மை என திரையுலகினர் கூறி வருகின்றனர்.