">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அஜித்துக்காக காத்திருக்கும் சிரஞ்சீவி… அவரை பார்த்து கத்துக்குங்கப்பா!…
அஜித்துக்காக காத்திருக்கும் சிரஞ்சீவி… அவரை பார்த்து கத்துக்குங்கப்பா!…
போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இறுதிக்கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவுள்ளது. எனவே, விரைவில் படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது. ரஷ்யா செல்வதற்கு முன் 2 நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
வலிமை படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாதான் ஒளிப்பதிவு செய்தார். இவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமான ‘காட்பாதர்’ படத்திலும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் மலையாளத்தில் ஹிட் அடித்த ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படத்தை ‘தனி ஒருவன்’ பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். ‘வலிமை’ திரைப்படம் விரைவில் முடிந்து விடும் எனக்கருதி சிரஞ்சீவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், ‘வலிமை’ படப்பிடிப்பு இழுத்துகொண்டே செல்கிறது.
காட்பாதர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய நீரவ் ஷா ஹைதராபாத் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், வலிமை படப்பிடிப்பு காரணமாக சென்னையில் இருக்க நேர்ந்தது. இதை எப்படி சொல்லி சமாளிப்பது என அவர் திண்டாடிய நிலையில், சிரஞ்சீவியே அவரை அழைத்து ‘பரவாயில்லை… அஜித் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்’ என பெருந்தன்மையாக கூறினாராம்.
இதையடுத்து மற்ற பெரிய நடிகர்கள் சிரஞ்சீவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பேசுகிறது திரையுலகம்..