More

இரண்டு ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைத்த விமோசனம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் வருடத்துக்கு இரண்டு படங்களை கடந்த சில ஆண்டுகளாக கொடுத்துவருகிறார். ஒவ்வொரு படத்தையும் திட்டமிட்டு அவர் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் மட்டும் படப்பிடிப்பில் காலதாமதம் ஆனது 

Advertising
Advertising

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு கால தாமதம் ஆவதாக கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி ஓரிரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டு வருடங்கள் கிடப்பில் போடப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு விமோசனம் கிடைத்து உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப் போவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் அடுத்த பிரமாண்டமான திரைப்படமான இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

Published by
adminram

Recent Posts