படம் ஸ்டார்ட் ஆகுறதுக்கு 6 மாசதுக்கு முன்னாடியே.. கமலை புகழ்ந்து தள்ளிய எஸ்.கே!....

Sivakarthikeyan: விஜய் டிவியில் விஜேவாக வேலை செய்து பின்னர் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவரை பிடிக்கும் என்பதுதான் இவரின் பிளஸ். அதோடு, ரஜினி, விஜய்க்கு பின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருக்கிறார்.
காமெடி ரூட்: அதனால்தான் குறுகிய காலகட்டத்திலேயே சினிமாவில் உச்சம் தொட்டார். ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். துவக்கத்தில் காமெடி கலந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் அவ்வப்போது சில சீரியஸான கதைகளில் நடித்து பார்த்தார்.
ஆனால், அப்படி வெளியான ஹீரோ மற்றும் வேலைக்காரன் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவில்லை. ஆனால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. வழக்கமான பாணியிலிருந்து விலகி சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் இது.
அமரன் திரைப்படம்: மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. உண்மை சம்பவம் என்பதால் இப்படம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகிப்போனது. இதுவே படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது.
ராஜ்கமல் பிலிம்ஸ்: சமீபத்தில் இப்படத்தின் 100வது நாள் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கமலை பார்த்து ‘எனக்கு சம்பளமெல்லாம் கரெக்டா வந்துடுச்சி சார். அதுவும் படம் ஸ்டார் ஆக 6 மாசத்துக்கு முன்னாடியே முழு சம்பளத்தையும் கொடுத்திட்டீங்க.
என்னோட ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் பல பிரச்சனைகள் வரும். நான் அன்பு செழியன் அண்ணன் வீட்லதான் இருப்பேன். சம்பளமே வராது. இல்லனா சம்பளத்தில் பாதியை ஒரு குரூப் பிடுங்கிக்கொண்டு போய்டுவாங்க. ஆனா, இந்த படத்தில் எனக்கு அப்படி எதுவும் நடக்கல. நன்றி சார்’ என ஜாலியாக பேசினார்.