Categories: latest news

மிட் நைட்ல வரும் போது! இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்ல.. மனசுல உள்ளத கொட்டிய SK

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி:

தற்போது தமிழ் சினிமாவில் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுவும் விஜயின் அரசியல் பயணம்தான் சிவகார்த்திகேயனை இப்போது லைம் லைட்டில் வைக்க காரணமாக அமைந்தது. ஏனெனில் விஜய் முழுவதுமாக அரசியலுக்கு சென்று விட்டால் விஜயின் இடத்தை யார் பிடிப்பார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் எழ அந்த நேரத்தில் அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என அனைவரின் கணிப்பாகவும் இருக்கிறது.

அது மட்டுமல்ல இன்னும் தொடர்ந்து இரண்டு மூன்று வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்து விட்டால் யாரும் அசைக்க முடியாத அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தொட்டு விடுவார் என்றும் பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள். அதற்கான முயற்சியிலும் தான் சிவகார்த்திகேயன் இப்போது இருந்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களும் திறமை வாய்ந்த இயக்குனர்களாகவே இருக்கிறார்கள். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள்:

இன்னொரு பக்கம் சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக துடிக்கும் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் நேற்று விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்த விழாவிற்கு சிவகார்த்திகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் மேடையில் பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக அவருடைய மாமனாரை பற்றி கூறியிருந்தார் .தன்னுடைய மாமனார் மனசு தங்கம் என்றும் ஆரம்பத்தில் வெறும் 4500 சம்பளமே வாங்கிக் கொண்டிருந்த என்னை இந்த அளவுக்கு என்கரேஜ் செய்து அவன் நிச்சயமாக ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில் எனக்கு பொண்ணும் கொடுத்து குடும்பத்தையும் நல்லபடியாக கவனித்தவர் தன்னுடைய மாமா என்று மிகவும் நெகிழ்ச்சி பட கூறி இருந்தார் சிவகார்த்திகேயன்.

உண்மையிலேயே கோட்:

அடுத்ததாக யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசிய போது அவர் உண்மையிலேயே ஒரு கோட் என கூறினார் சிவகார்த்திகேயன். பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான ஹிட் பாடல்களை கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா என பெருமையாக பேசி இருந்தார் .அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ஹீரோ படத்தின் ஒரு விழாவிற்கு மிட் நைட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென யுவன் சங்கர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டே போனாராம்.

sivakarthikeyan

அப்போது அந்தப் பாடலை கேட்டதும் உடனே யுவனுக்கு போன் செய்து நீங்கள் மற்றும் நா. முத்துக்குமார் காம்போவில் நான் ஒரு படம் பண்ணால் நன்றாக இருக்கும் என கூறினாராம் சிவகார்த்திகேயன். அதுவரை நான் யாருக்குமே அப்படி மிட்நைட்டில் போன் செய்து பேசியதே கிடையாது. அந்த அளவுக்கு அவருடைய பாடல் என்னை கவர்ந்தது என கூறினார் சிவகார்த்திகேயன்.

ராம் சுதன்

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

52 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

12 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

12 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

14 hours ago