
தேனியில் மதுப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தனது பெரியப்பாவைக் கொலை செய்துவிட்டு மறுநாள் காலை போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளர் ஒருவர்.
தேனி மாவட்டம் சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் கனகவேல் ஐய்யப்பன். இவரின் பெரியப்பாவின் பெயர் பெத்தண்ண சாமி. இவர்களுக்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லாததால் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கனகவேல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் அவருக்கும் பெரியப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினமும் வழக்கம்போல கனகவேல் குடித்துவிட்டு வர பெத்தண்ணசாமி அவரைக் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் உருட்டுக் கட்டையை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார். இதில் பெத்தண்ணசாமி மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஆனால் போதையில் அதுகூட தெரியாமல் கனகவேல் படுத்து உறங்கியுள்ளார்.
பின்னர் காலையில் எழுந்தபோதுதான் நடந்தது அவருக்கு நினைவு வந்துள்ளது. இதன் பின்னர் நேராக போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர் சரணடைந்துள்ளார்.



