கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்தியாவில் இவ்வைரஸ் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாகதான் அதிகமாக பரவுகிறது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தாங்களே இரு வாரங்களுக்கு வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக லண்டனில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதே போல அவரை சந்தித்த அவரது குடும்பத்தினரான சரிகா, அக்ஷரா ஹாசன் ஆகியோரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இது சம்மந்தமாக ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Nayanthara: தமிழ்…
ஹாலிவுட்டில் லாரல்…
Coolie: ரஜினிகாந்தின்…
குடும்பத்திலும், உறவினர்களிலும்…
GoatMovie: விஜய்…