">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படியும் ஒரு இரக்கமற்ற தாயா? அதிர்ச்சி வீடியோ
அம்மா என்றால் அன்பு, கருணை, பாசம் என்றுதான் அகராதியில் கூட இருக்கும். அந்த அளவுக்கு ஒரு அம்மா என்பவள் தன்னுடைய குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பார்.
அம்மா என்றால் அன்பு, கருணை, பாசம் என்றுதான் அகராதியில் கூட இருக்கும். அந்த அளவுக்கு ஒரு அம்மா என்பவள் தன்னுடைய குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பார். எந்த நிலையிலும் தன் குழந்தையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய குழந்தையை காப்பவர் தான் அம்மா என்பதுதான் இதுவரை உலகில் நாம் கண்டு வந்த உண்மை ஆகும்
ஆனால் பெற்ற தாய் தன்னுடைய குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு முடிச்சுப்போட்டு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. இதனால் அந்த பக்கம் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து குப்பைத்தொட்டியை எட்டிப் பார்த்தபோது கருப்பு நிற பிளாஸ்டிக் பை முடிச்சு போட்டு இருந்தது. அந்த பையை எடுத்து முடிச்சை அவிழ்த்து பார்த்தபோது அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது
இதனையடுத்து அந்த குழந்தைக்கு தற்போது முதலுதவி அளிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் போடும் அளவிற்கு அந்த தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. என்ன இருந்தாலும் இப்படி ஒரு இயக்கமற்ற செயலை செய்த தாய் யார் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது
இந்த உலகம் மனிதநேயத்தை என்றோ இழந்து விட்டது !! pic.twitter.com/cm8agoQv4I
— சக மனிதன் (@commonmantalks) January 8, 2020