சசிக்குமார் முதன் முதலில் நடித்து, இயக்கிய திரைப்படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதன்பின் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. வருகிற 31ம் தேதி நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.
சசிக்குமார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பே அவரும் சமுத்திரக்கனியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இயக்குனர் அமீர் ராம் படத்தை இயக்கிக் கொண்டிருந்ஹ நேரத்தில் அவரிடம் வாய்ப்பு கேட்க சமுத்திரக்கனி சென்று சென்றுள்ளார். அப்போது, அமீரிடம் சசிக்குமார் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். எனவே, சமுத்திரக்கனியை மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து அவர்தான் பைக்கில் அமீரிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆரம்பித்த நட்புதான் தற்போது வரை தொடர்வதாக கூறப்படுகிறது.
நாயகன் படத்திற்கு…
Actor Simbu: இன்று…
அஜித்குமாரின் விடாமுயற்சி…
Actress Richa…
நடிகை ஸ்ருதிஹாசன்…