இந்தியா முழுவதும் நடந்துவரும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மத்திய அரசுக் கொண்டுவந்த குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுவும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டங்கள் குறித்து ராணுவத் தளபதி விபின் ராவத் ’ போராட்டங்களை வன்முறைப்பக்கம் திருப்புவர்கள் தலைவர்களே இல்லை. அவர்களுக்கு மக்களை வழிநடத்த எந்த தகுதியும் இல்லை’ என தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதிகள் பொதுவாக அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிக்காத சூழ்நிலையில் விபினின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
பழம்பெரும் நடிகரும்…
கல்கி படத்தில்…
Actor Rajini:…
தமிழ் சினிமாவின்…
சென்னை 28…