More

ஸ்கூல் திறக்காததால் பார்ட் டைம் வேலைக்கு சென்ற மாணவி… ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்ற இளைஞர்!

பள்ளி மாணவி ஒருவர் பார்ட் டைமாக துணிக்கடை ஒன்றில் வேலைப் பார்க்க அப்போது இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி அவரைக் கடத்திச் சென்றுள்ளார்.

Advertising
Advertising

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர், கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காததால் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் பார்ட் டைமாக வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் மற்றொரு துணிக்கடையில் பணியாற்றி வந்த யுவ்ராஜ் என்ற இளைஞர் அந்த பெண்ணை அடிக்கடி பின் தொடர்ந்து ஆசை வார்த்தைகளைக் கூறி பேசி வந்துள்ளார். சிறுமியிடமும் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு முதலில் மறுத்த சிறுமி, பின்னர் அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதும் அதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

கடந்த 19ம் தேதி வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க, அவர்கள் நடத்திய விசாரணையில் மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு கொருக்குப்பேட்டை யுவராஜ் உடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியைக் காப்பாற்றிய போலீஸார், அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts