More

சிபிஐ விசாரணைக்கு செல்லும் சுஷாந்த் சிங் வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது.இது தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலி மீது அவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், சுஷாந்தின் மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவரின் காதலி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து அவரின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும்  சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts