சூர்யா நடிக்க இருக்கும் அருவா திரைப்படம் ஆக்ஷன் கதையாக மட்டுமில்லாமல் செண்ட்டிமெண்ட் அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் 39 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்குவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இணையும் இந்த படத்துக்கு அருவா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதனால் இது ஆக்ஷன் படமாகதான் இருக்கும் என ரசிகர்கள் நினைத்த வேளையில் இதுவெறும் ஆக்ஷன் படம் மட்டும் அல்ல, அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள செண்ட்டிமெண்ட் படம் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
அண்ணன் தம்பி கதை என்பதால் சூர்யாவே இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…