பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். சூர்யாவுடன் ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் சூர்யாவின் நடிப்பில் உருவாக இருக்கும் 40வது படம்.
இப்படத்தின் பூஜைகள் இன்று நடைபெற்று இருக்கிறது. நாயகி உட்பட படக்குழு மொத்தமும் கலந்துக் கொண்ட இந்நிகழ்வில், சூர்யா மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டு, தற்போது குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் கலந்துக் கொள்ளவில்லை. கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றிய ரத்னவேலு, இப்படத்திற்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Director Sundar…
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…