
அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் சூர்யாவைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.
அகரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாணவி தான் பட்ட கஷ்டங்களை சொல்லி மேடையில் இருந்த சூர்யாவை அழ வைத்தார். அதன் பிறகு பேசிய சூர்யா ‘என்னை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு திருப்பி உதவும் முயற்சியாகவே அகரம் அறக்கட்டளை ஆரம்பித்தோம்.’ எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘ சிங்கம் படத்தில் வில்லன்களை சூர்யா அடிப்பதைப் பார்த்து இவருக்கெல்லாம் மனித நேயம் இருக்குமா என நினைத்தேன். ஆனால் அவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவருடைய மனிதநேயம் என்னை வியக்க வைத்து விட்டது. அரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.