அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த ரங்கராஜ் பாண்டே அஜித்துடனான படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
தந்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த ரங்கராஜ் பாண்டே அங்கிருந்து விலகி சினிமாவில் நுழைந்தார். ஆரம்பமே அமர்க்களமாக அவரது முதல் படமே அஜித்துடன் சரிக்கு சரி மோதும் வேடமாக அமைந்தது. அந்த படம் வெற்றி பெற்றாலும் அதன் பின்னர் பாண்டேவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாண்டே நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது பற்றி ‘நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போது முதலில் சரியாக நடிக்காமல் பல டேக்குகள் வாங்கினேன். அதன் பின்னர் அஜித் வந்து என்னிடம் ‘நீங்கள் நன்றாகதான் நடிக்கிறீர்கள்’ எனக் கூறினார். அதன் பின்னர்தான் தலயே சொல்லிட்டாரு… பாத்துருவோம்னு தைரியமாக நடித்தேன்’ எனக் கூறியுள்ளார்.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…