More

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய தமன்னா – கட்டித்தழுவி வரவேற்ற குடும்பத்தினர்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில்  தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா அந்த நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்ற வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts