உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியைக்கு நடந்த விபரீதம் !

Published On: January 2, 2020
---Advertisement---

c2e8d1ea86bc8f78afc114611d40ba0d

உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்டோரம்பட்டி உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக கமலி என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டு இருந்தார். பணிகள் முடிந்ததும் அவர் தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் செல்ல அப்போது விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு தலையில் அடிபட அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அவர் கணவர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட, அங்கிருந்து திருவண்ணாமலைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது கமலியின் உறவினர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.

Leave a Comment