
நாமக்கல்லில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ராமபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளி மாணவனை மலம் அள்ள சொல்லி கொடுமை படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.