More

12 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞன் – போக்ஸோ சட்டத்தில் கைது !

வேலூர் மாவட்டம் அருகே குடியாத்தம் அருகே உள்ள சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவர் அதே பகுதியில் வசிக்கும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரை தினமும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனிடையில் அவரிடம் தன்னைக் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

தன்னுடைய செல்ஃபோனில்

அம்மாணவியின் புகைப்படத்தை எடுத்து வைத்து தொடர்ந்து காதலிக்க சொல்லி தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த சிறுமி பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க அந்த இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts