More

பேருந்தின் மீது மோதிய டெம்போ – சமாதானம் செய்த காவலருக்கு நேர்ந்த விபரீதம் !

கேரள மாவட்டத்தில் டிரைவர்களுக்கு இடையிலான சண்டையை சமாதானம் செய்ய முயன்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றொரு டெம்போ மோதி பரிதாபமாக இறந்துள்ளார்.

Advertising
Advertising

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன்இவர் கேரள சிஆர்பிஎஃப்-ல் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நேற்று முன் தினம் அவர் தன் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பேருந்தின் மீது வைக்கோல் ஏற்றிவந்த டெம்போ ஒன்று மோத பேருந்து ஓட்டுனருக்கும் டெம்போ ஓட்டுனருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

அப்போது அருளப்பன் கீழே இறங்கி சென்று இரு ஓட்டுனர்களையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த டெம்போ ஒன்று சாலையில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது. இதில் அருளப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காயம்ப்ட்ட சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts