விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை பிரியங்கா மேனன் தளபதியின் நாயகியாகி இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை விஜயே கன்பார்ம் செய்து இருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இயக்குனர் தேர்வில் மும்முரமாக இருக்கிறாராம்.
இயக்குனர்கள் பட்டியலில் அட்லீ மற்றும் லோகேஷிற்கு தான் பெரும் போட்டி நிலவுவதாக தெரிகிறது. அந்த வகையில், மெர்சல் படத்தில் பெரிய பட்ஜெட் எகிறியதற்காக தான் இப்படத்தின் தயாரிப்பை விஜய் தேனாண்டாள் பிலிம்ஸிற்கு கொடுத்திருக்கிறார். பெரிய செலவு இல்லாமல் இயக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜை தான் விஜய் தேர்வு செய்வார் எனவும் கிசுகிசுக்கிறது கோலிவுட்.
தமிழ்ப்பட உலகில்…
Actor Rajini:…
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…