More

சுந்தர் சியிடம் வேலையைக் காட்டிய அந்த இசையமைப்பாளர்… அதிரடியாய் நடந்த மாற்றம்!

இயக்குனர் சுந்தர் சி யின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்துவந்த ஹிப் ஹாப் ஆதியை இப்போது தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதை நிறுத்தியுள்ளார்.

Advertising
Advertising

ஒரு சில இசை ஆல்பங்கள் செய்திருந்த ஆதியை தன்  ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சுந்தர் சி. அதன் பின் வரிசையாக அவர் படங்களில் வேலை செய்ய, தன் தயாரிப்பிலேயே ஆதியை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார். அந்த கூட்டணியில் மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்கள் உருவாகின.

இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது ஆதி பெரிய ஹீரோ ஷூட்டிங்குக்கு தாமதாக வந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கடுப்பான சுந்தர் சி அடுத்ததாக இயக்க இருக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு சத்யாவை இசையமைப்பாளராக பணியமர்த்தினார். மேலும் தான் தயாரிக்க இருக்கும் மாயா பஜார் படத்திலும் ஹிப் ஹாப் ஆதிக்கு வேலை கொடுக்கவில்லையாம்.

Published by
adminram