ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அந்த படத்துக்குப் பின் ஆண் தேவதை படத்தில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் வாய்ப்புகளைக் கவரும் பொருட்டு சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதனால் அவருக்கான ஆர்மியும் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து ரசிகர்கள் மனதை குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கவர்ந்தார். அதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஃபைனல் வரை சென்ற ஒரே பெண் என பெருமையை பெற்றார். மேலும், பிக்பாஸ் முடிந்து வீடு திரும்பிய ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் மேள தளத்துடன் பட்டாசு வெடித்து, மாலை போட்டு , ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோவை இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு எல்லோரும் கலாய்த்துத்தள்ளினர்.
இந்நிலையில் தற்போது பெல்ட் பேண்டில் எடுத்துக்கொண்ட மாடர்ன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்துள்ளார். பிக்பாஸுக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் இவங்க ஆட்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா தான் இருக்கு… இன்னும் ஆரி இடத்தில் நின்னு ஜெயித்திருந்தால் கையிலே பிடிக்க முடியாதுடா சாமி…
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…