பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் ஆபாச படங்களை உருவாக்கி செல்போன் ஆப் மூலம் வினியோகம் செய்துவந்துள்ளதாக கூறி மும்பை போலிசார் அவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்ததாகவும், ராஜ் குந்த்ராவே குற்றவாளி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் சர்ச்சையில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த காலங்களில் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீர்த்தி…
விஷாலின் புது…
விஜய் டிவியில்…
இன்ஸ்டாகிராம் திறந்தாலே…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…