More

கடைசி படமே ரிலீஸாகல.. மறுபடியும் விஜய் சேதுபதியா?… ரிஸ்க் எடுக்கும் இயக்குனர்….

காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். சேரியில் வசிக்கும் இரு சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழுவதை அழகாக படம்பிடித்திருந்தார். ஒரு பீட்சாவை சாப்பிட பணம் சேர்க்க அவர்கள் செய்யும் வேலை ரசிகர்களை கவர்ந்தது. எனவே, அப்படம் வெற்றி பெற்றது. விருதுகளையும் பெற்றது.

Advertising
Advertising

அப்படத்திற்கு பின் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்தது. வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் விஜய் சேதுபதி என்ன பாடுபடுகிறார் என்பதை நகைச்சுவையுடன் விளக்கியிருந்தார் மணிகண்டன்.  

அதன்பின்,  விவசாயத்தின் அருமையை உணர்த்தும் வகையில் இயக்கிய திரைப்படம் கடைசி விவசாயி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்ததோடு, பாடல்களையும் எழுதியுள்ளார். இப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆனால், தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை.

ஆனால், மணிகண்டன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். ஒரு கதையை உருவாக்கி விஜய் சேதுபதியிடம் கூறி ஓகே பெற்றுள்ளார். ஆனால், கையில் ஏராளமான படங்களை விஜய் சேதுபதி வைத்திருப்பார் அவர் எப்போது மணிகண்டனுக்கு கால்ஷீட் கொடுப்பது என்பது தெரியவில்லை. ஒருவேளை விஜய்சேதுபதி தாமதப்படுத்தினால் வேறு ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்க மணிகண்டன் திட்டமிட்டுள்ளாராம்.

Published by
adminram

Recent Posts