வீடியோக்கள் வந்த மர்ம எண் … பெண் குரலில் ஆபாச பேச்சு – போலிஸ் விசாரணையில் திடுக் தகவல் !

123dc6978fb33b7d1150d43c67c37a75

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 30 பெண்களுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி அருவருக்கத்தக்க வகையில் பேசியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆபாச மெஸேஜ் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வந்துள்ளது. இதையடுத்து அந்த மர்ம நம்பருக்கு போன் செய்து அவர் திட்ட ஆரம்பிக்க, எதிர் முனையில் பெண்குரல் ஒன்று ஆபாசமாக பேசியுள்ளது.

இதையடுத்து அந்த பெண் போலீஸில் புகாரளிக்க, போலீஸார் சம்மந்த பட்ட நபரை மொபைல் சிக்னல் மூலம் டிராக் செய்ய அவர் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவரை கைது செய்து போலிஸார் விசாரிக்க உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் குற்றவாளியின் பெயர் வினோத் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனைத் திருடிய அவர், செல்போனில் இருந்த 30 பெண்களின் எண்களுக்கு இதுபோல் ஆபாச படங்களை அனுப்பியும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியும் நடந்துள்ளது தெரிந்துள்ளது. வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Related Articles

Next Story