சுப்ரமணியபுரம் சுவாதியா இது? ஷாக் ஆன ரசிகர்கள்

சுப்ரமணியபுரம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சுவாதி.முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றவர் இவர். தொடர்ந்து தமிழில் கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசப்பட்டாய் பாலகுமாரா, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.

சுவாதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் தற்போது வசித்து வருகிறார்.

சுவாதி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

காரணம் ஒல்லியான தேகத்தில் அடையாளமே தெரியத அளவிற்கு சுவாதி மாறியுள்ளார்.  

Published by
adminram