More

அறம் படத்துக்குப் பிறகு இந்த படம்தான் – உறுதியாக சொல்லும் இசையமைப்பாளர்!

அறம் படத்துக்குப் பின்னர் தமிழில் ஒரு முக்கியமான படமாக க/பெ ரணசிங்கம் அமையும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

நேற்று மாலை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விருமாண்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள க /பெ ரணசிங்கம் எனும் படத்தின் போஸ்டர் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான், ‘அறம்

படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக க/பெ ரணசிங்கம் இருக்கும். அந்த படத்தில் நானும் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் அற்புதமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாகக் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram