தமிழகத்தில் டீ கடைக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமுலில் உள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் பெரிதாக அறிவிக்கப்படவில்லை. இதர 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அழகு நிலையங்கள், சலூன்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டீக்கடைகளை திறக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by
adminram