More

78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விவேக்கின் இறுதிச்சடங்கின் போது 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூக சேவையை கௌரவிக்க காவல்துறை மரியாதை அளிக்கப்படவுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
 

Published by
adminram

Recent Posts