More

விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி – பீதியில் மக்கள்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்திய உட்பட பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனா, இத்தாலி, ஐரோப்பியா நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 112 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

எனவே, மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், துபாய் விமான நிலையத்திலிருந்து இன்று தமிழகம் திரும்பிய 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து துபாய் வழியாக இந்தியா வந்தது தெரிய வந்தது.

எனவே, அவர்கள் சென்னை பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு பரிசோதனைகளும் செய்யப்பட்டு முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள், அல்லது சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts