More

கொரானாவுக்கு மாற்று சிகிச்சை ; வாட்ஸ் அப் மூலம் வதந்தி : ஹீலர் பாஸ்கர் கைது

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

Advertising
Advertising

எனவே, கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கவும், அந்நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, ஹீலர் பாஸ்கர் என்பவர் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மக்களை கொல்ல அரசு திட்டமிட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு தான் மற்றுசிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts