வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ளது.
சிம்பு ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், ஒசூரில் ஒரு விமானத்தில் நடைபெறும் காட்சியை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு 2வது அலை வேகமாக பரவி வருவதால் இந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் வெங்கட்பிரபுவின் தாய் மரணமடைந்தார். எனவே, அதிலிருந்து அவர் மீண்டு வந்த பின் படப்பிடிப்பு நடக்கும் என தெரிகிறது.
இதுவரை மூன்று…
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…
தெலுங்கு படங்களில்…