தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலா.
நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
வர்மா படத்தை இவர் இயக்கியது பிடிக்காமல் போனதல், வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுத்த விஷயம் திரையுலகில் அவருக்கு அவ மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தன்னை மீண்டும் நிரூபிக்கும் நிலையில் பாலா இருக்கிறார்.
எனவே, அடுத்த இரண்டு ஹீரோ கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவர் அதர்வா என்பது உறுதியாகி விட, மற்றொரு ஹீரோவுக்கு உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். பாலா இயக்கத்தில் நடிக்க உதயநிதியும் ஆர்வம் காட்டி வருவதால் விரைவில் இந்த தகவல் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…
தமிழ் சினிமாவில்…